தொழில்முனைவோரின் இறுதிநிலை உற்பத்தி திறனுக்கு சமமாக இலாபம் கிடைக்கும் என்று பேரா. சேப்மன் கூறுகிறார். ஆனால் தொழில்முனைவோரின் இறுதிநிலை உற்பத்தி திறனை அளிப்பது மிகக் கடினமாகும். இது இக்கோட்பாட்டின் முக்கிய பிரச்சனை. உற்பத்தியில் ஒரு தொழில்முனைவோரை கூட்டியோ, குறைத்தோ இறுதிநிலை உற்பத்தி திறனை கணக்கிடவேண்டும். ஆனால் ஒரு தொழில்முனைவோர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. அதைப்போல இருக்கும் ஒரு தொழில் நடைபெறாது. எனவே, தொழில்முனைவோரின் இறுதிநிலை உற்பத்தித் திறனை மறைமுகமாகத்தான் அளக்க முடியும்.
குறைபாடுகள்
- தொழில்முனைவோரின் இறுதிநிலை உற்பத்தித் திறனை முடியாது.
- இக்கோட்பாடு முன்னுரிமை இலாபத்தை விளக்க வில்லை. மேலும் திடீரென்று ஏற்படும் இலாபத்தையும் விளக்க வில்லை.
- தொழில்முனைவோரின் திறமை வேறுபடுகிறது. திறமைக்கேற்ப இலாபம் வேறுபடுகிறது.ஆனால் இக்கோட்பாடு எல்லா தொழில்முனைவோர்களும் ஒரியல்பு படைத்தவர்கள் எனக் கூறுகிறது.